Omicron திரிபு: ஆஸ்திரேலிய எல்லைக் கட்டுப்பாடுகளில் புதிய மாற்றம்!

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

Travellers adhere to social distancing rules as they check in for their flights at the Sydney International Airport, Sydney, Friday, March 27, 2020.

Travellers adhere to social distancing rules as they check in for their flights at the Sydney International Airport. Source: AAP

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் மேலும் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இந்நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே இங்கு வரமுடியும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

ஆனால் இந்நடவடிக்கையை மேலும் இரு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடுவதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omicron பரவலை நன்கு புரிந்துகொள்ள தேவையான தகவல்களை சேகரிக்க இந்த நடவடிக்கையானது உதவும் என ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.  

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டவர்கள், டிசம்பர் 1 முதல் ஆஸ்திரேலியாவுக்கு பயணம்செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் இதுவும் இரு வாரங்களுக்கு  பிற்போடப்படுகிறது.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய விசா வைத்திருக்கும் சுமார் 2 லட்சம் பேர், எதிர்வரும் டிசம்பர் 1  முதல் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், தற்போது அவர்கள் மேலும் இரண்டு வாரங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 29 November 2021 10:22pm
Updated 29 November 2021 10:46pm

Share this with family and friends