“தமிழக மக்களிடம் இதை சொல்லவில்லை என்றால் துரோகம் இழைத்தவனாவேன்”

Nammalavar.jpg

G. Nammalvar

வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்கள் (6 ஏப்ரல் 1938 - 30 டிசம்பர் 2013) ஒரு பசுமைப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண்மை நிபுணர். சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதில் அவர் செய்த பணிக்காக பெரிதும் போற்றப்பட்டவர். அவரது பத்தாவது நினைவு தினம் அடுத்த மாதம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த பின்னணியில், நம்மாழ்வார் அவர்கள் இந்த உலகைவிட்டு விடைபெறும் ஆறு மாதங்களுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகம். அவருடன் பேசியவர் – றைசெல். இந்த நேர்முகம் ஒரு மறு ஒலிபரப்பு.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Share