மெல்பனில் மனைவியையும் மகளையும் கொலை செய்ததாக இந்திய நபர் மீது வழக்குப் பதிவு!

மெல்பனில் இந்தியப் பின்னணி கொண்ட பெண் ஒருவரும் அவரது 6 வயது மகளும் அண்மையில் கொலைசெய்யப்பட்டிருந்தநிலையில், குறித்த பெண்ணின் கணவன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Vic Police

Source: Vic Police

கடந்த 13ம் திகதி மெல்பன் வடக்குப் பகுதியில் Mill Park - Kellaway Crescent-இலுள்ள வீடொன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அங்கு சென்றபோது, பூனம் சர்மா(வயது 39) என்ற பெண் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவரது 6 வயது மகள் வனேஸா, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பூனம் சர்மாவின் கணவர் பிரபால் சர்மா(வயது 40) கைதுசெய்யப்பட்டதுடன், காயங்களுக்குள்ளாகியிருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிரபால் சர்மா மீது இரு பிரிவுகளில் கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டிலிருந்த மற்றொரு மகள்(வயது 10) எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியிருந்தார்.

இவருக்கு உதவும்நோக்கில் தற்போது நிதிசேகரிப்பு இடம்பெற்றுவருகிறது.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at  and on 1300 22 4636. 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 26 January 2022 12:16am
Updated 26 January 2022 12:32am

Share this with family and friends