விக்டோரியாவின் Geelong கடலில் மூழ்கி தமிழ் இளைஞன் பலி!

Geelong

Source: Catherine Eastwood / EyeEm, Facebook

புதுவருடத்துக்கு முன்னைய விடுமுறை நாளொன்றில் Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த தமிழ் இளைஞன் கடலில் இழுத்துச்செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி Geelong கடலில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்பன் - Epping பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபிரகாஸ் செல்வராசா (வயது 29) என்பவர் ஆவார்.

விக்டோரிய மாநிலத்தின் பிரபலமான Geelong  கடலில் குளித்துக்கொண்டிருந்த சிறிபிரகாஸ் செல்வராசா, கடந்த 29 ஆம் திகதி கடலில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலீஸார் விரைந்திருக்கிறார்கள். வெகுநேரம் தேடிய பின்னர், அன்று மாலையளவில் சிறிபிரகாஸின் சடலம் Geelong கிழக்கு கடலுக்கு அப்பாலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை கோடை விடுமுறைக் காலத்தில் நீச்சல்காரர்கள் மிகவும் விரும்புகின்ற Geelong கடல், தற்போது விக்டோரியாவின் மிக ஆபத்தான கடற்பகுதியாக மாறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மாறுகின்ற காலநிலையால் கொந்தளிப்பது மாத்திரமன்றி, இந்தக் கடலில் சுறா தாக்குதலும் இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geelong பகுதியில் இந்தவருடம் இடம்பெற்றுள்ள ஆறாவது உயிர்ப்பலி இது என்றும், நீச்சல்காரர்களுக்கு உதவியாக கரையில் பணியமர்த்தப்படுகின்றன உயிர்காக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகவும், உயிர்காக்கும் படைப்பிரிவின் விக்டோரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

விக்டோரிய மாநிலத்தில் கடந்த 20 வருடங்களில் 2021 ஆம் ஆண்டுதான் மிக அதிக எண்ணிக்கையிலான கடற்பலிகள் இடம்பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டியில் சுமார் 61 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளார்கள் என்றும் இவர்களில் 25 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 3 January 2022 10:20am
Updated 3 January 2022 10:54am

Share this with family and friends