ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், நாளை 6ம் திகதி இரவு 12.01 முதல் 10ம் திகதி இரவு 11.59 வரை சாலை விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
சாலைவிதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
உதாரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT-இல் வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு $352 அபராதமும் 10 demerit புள்ளிகளும் தண்டனையாக விதிக்கப்படும். இக்குற்றம் school zone-இல் இடம்பெற்றால் அபராதத்தொகை $469ஆக உயரும்.
அதேநேரம் ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ANZAC தினத்தையொட்டிய ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25ம் திகதி வரையான காலப்பகுதியிலும் double-demerit points தண்டனை விதிக்கப்படும்.
இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பண்டிகைக்காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் Northern Territory-இல் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை.
இருப்பினும் சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கவென, விடுமுறைக் காலத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.